உலக வாழ்க்கையில் சிக்கி பாவத்தில் உழலும் மக்களை விடுவிக்கவே மகான்களுக்கு தெய்வீக சக்தியினை கடவுள் அளித்துள்ளார். அத்தகைய அற்புத மகா சன்னிதானமாக
“ஆனந்த துவாரகா” என்னும் திருசன்னிதானம் சின்னத்திருப்பதியில் அமைந்துள்ளது.
“ஆனந்த துவாரகா” – அருள் ஒளி ராமன் ஸ்வாமிஜி தினமும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தேவையான கோரிக்கைகளை, தன்னுடைய தெய்வீக அருள்வாக்கு மூலமும், அவர்களின் நல்வாழ்விற்கு தெய்வீக ஆசீர்வாதமும், அவர்களின் வேண்டுதலுக்கு வரங்களையும் அள்ளித்தருகிறார்.
ஸ்வாமிஜியை நாடி வரும் பக்தர்களுடைய வாழ்க்கையில் அமைதியையும், துன்பங்களிலிருந்து மீட்டு மகிழ்ச்சியையும், அவர்களின் மானுட வாழ்க்கை நல்வழியில் செல்லவும், மேலும் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறார்.
தினமும் ஸ்வாமிஜியை பல்லாயிரக்கணக்கானோர் அவருடைய ஆனந்த துவாரகாவில் சந்தித்து மகிழச்சியையும் அமைதியையும் ஆனந்தத்தையும் பெற்றுச் செல்கின்றனர்.
|