ஸ்வாமிஜியை நாடி வரும் பக்தர்களுடைய வாழ்க்கையில் அமைதியையும், துன்பங்களிலிருந்து மீட்டு மகிழ்ச்சியையும், அவர்களின் மானுட வாழ்க்கை நல்வழியில் செல்லவும், மேலும் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறார்.
கடவுளின் வழிகாட்டுதலின்படியே மனிதனுக்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கி, இடர்பாடுகளை களைத்து, தகுதியான குருவை காட்டுவார். இவ்வாறு கடவுளின் அருளால் கிடைக்கபெறும் குரு அவனுடைய அஞ்ஞானத்தைப் போக்கி, அவனுடைய துன்பங்களை களைந்து அவனை இறைவழி நோக்கிச் செல்ல உபதேசிப்பார்.
கர்ம வினைகள்தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை நிச்சயம் செய்கிறது. ஸ்வாமிஜி அவர்கள் அதிசயத்தக்க விதத்தில் உடல் நிலை, மனநிலை, செல்வ நிலை ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும் விதத்தில் நல்லாசி வழங்குகிறார். அவருடைய நல்லாசியால் பல லட்சக்கணக்கான மக்கள் நிரந்தர தீர்வு பெற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
சீரடியில் வீற்றிருக்கும் சாய்பாபாவினாலும், குரு தத்தாத்ரேயராலும் பெரிதும் ஆசிர்வதிக்கப்பட்டவர்தான் அருட் திரு ராமன் ஸ்வாமிஜி. மேலும் உலகில் உள்ள பல கடவுள்களாலும், மகான்களாலும் பூரண ஆசியை பெற்றவர் ஆவார்.